ADDED : மே 06, 2025 06:47 AM

அ நிறம் | அளவு
கடலுார்; தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடலுார் மாநகரில் வணிகர் தினத்தையொட்டி கொடியேற்று விழா நடந்தது.
மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கி கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட செயலாளர் வீரப்பன், மாவட்ட இணைசெயலாளர் சதீஷ், நகர இணை செயலாளர் சரவணன், பகுதி செயலாளர் ரவிச்சந்திரன், தங்கராஜ், செந்தில்குமார், விக்னேஷ், வெங்கடேஷ், பாண்டியன், ரங்கநாதன், ராமகிருஷ்ணன், சுந்தரம் உட்பட பலர் உடனிருந்தனர்.
