sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதிய கல்விக் கொள்கை வேண்டாம் அமைச்சர் பொன்முடி பேச்சு

/

புதிய கல்விக் கொள்கை வேண்டாம் அமைச்சர் பொன்முடி பேச்சு

புதிய கல்விக் கொள்கை வேண்டாம் அமைச்சர் பொன்முடி பேச்சு

புதிய கல்விக் கொள்கை வேண்டாம் அமைச்சர் பொன்முடி பேச்சு

1


ADDED : மார் 17, 2025 08:59 AM

Google News

ADDED : மார் 17, 2025 08:59 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : 'தமிழகத்திற்கு புதிய கல்விக் கொள்கை வேண்டாம்' என அமைச்சர் பொன்முடி பேசினார்.

மங்கலம்பேட்டையில், மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார்.

சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி, மங்கலம்பேட்டை பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலர் வேல்முருகன் வரவேற்றார்.

மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, விருத்தாசலம் தொகுதி பொறுப்பாளர் சபா சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கணேஷ்குமார், வழக்கறிஞரணி மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம், அவை தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

மங்கலம்பேட்டை பேரூர் செயலர் செல்வம் நன்றி கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'நமது தாய்மொழியை கண்டிப்பாக படிக்க வேண்டும். அதேபோல் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்கிற நமது பிள்ளைகள் அங்குள்ள மக்களோடு பழகுவதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் படித்திருந்தால் நாம் எந்த நாட்டிற்கும் சென்று வர முடியும்.

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்தினால், 8ம் வகுப்பைத் தாண்டி மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால்தான் புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்கிறோம்' என்றார்.






      Dinamalar
      Follow us