ADDED : பிப் 07, 2026 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த தொ.குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் மலர்கொடி, 35; சசிகலா, 47; விஜயலட்சுமி, 40; ஜோதிலட்சுமி, 57; இவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தனர்.
கடந்த 1ம் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிறு வாச்சூர் மேம்பாலம் அருகே நடந்து சென்ற போது, கார் மோதியதில், மலர்கொடி, சசிகலா, விஜயலட்சுமி இறந் தனர். இவர்களின் குடும்பத்தினரை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சந்தித்து ஆறுதல் கூறினார். நல்லுார் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்து, செந்தில்நாதன், வரதராஜன் உடனிருந்தனர்.

