/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு
/
பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு
பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு
பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு
ADDED : மார் 01, 2024 12:04 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 2022- - 23ம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சி.இ.ஓ., பழனி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். பெரியகுப்பம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் வரவேற்றார். கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை 20 மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் கவிதா தேசாய், லோகேஷ் குமார், கணபதி, தமிழ் ஆசிரியை உமா உட்பட பலர் கலந்து கொண்டனர். மோகனவேல் நன்றி கூறினார்.

