/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மத்திய சிறையில் மொபைல் போன் பறிமுதல்
/
கடலுார் மத்திய சிறையில் மொபைல் போன் பறிமுதல்
ADDED : பிப் 18, 2026 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மத்திய சிறையில் மரத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலுார் மத்திய சிறையில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு சோதனைக்குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய சிறை தண்டனை தொகுதி 16ன் பின்புறம் உள்ள பலா மரத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மொபைல் போன் மற்றும் இரண்டு பேட்டரிகளை கண்டெடுத்தனர். அவற்றை யார் அங்கே வைத்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சிறைஅலுவலர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

