/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மோடி பிறந்த நாள் விழா ரத்த தானம் வழங்கல்
/
மோடி பிறந்த நாள் விழா ரத்த தானம் வழங்கல்
ADDED : செப் 18, 2025 03:13 AM

கடலுார்: பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, பா.ஜ.,சார்பில் விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் ரத்த தான முகாம் நடந்தது.
பா.ஜ.,கடலுார் கிழக்கு மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இருப்பு கிராமத்தில் ரத்த தான முகாம் நடந்தது. கடலுார் மாவட்ட பொதுசெயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். லதா ஆறுமுகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். விருத்தாசலம் ரத்த வங்கி டாக்டர் குலோத்துங்க சோழன் மற்றும் டாக்டர்கள் கதிரவன், செல்வபாரதி மற்றும் கம்மாபுரம் சுகாதாரத்துறை ஊழியர்கள் முகாமை நடத்தினர். முகாமில் 60க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். நிர்வாகிகள் முன்னாள் கம்மாபுரம் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் பிரதீப், பிரசாத், சங்கர், ஆனந்த், கவியரசன், பொருளாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.