/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் மாசிமக ஏற்பாடு தீவிரம்
/
புவனகிரியில் மாசிமக ஏற்பாடு தீவிரம்
ADDED : பிப் 21, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில் ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி நான்கு நாட்கள் எழுந்தருளுவது வழக்கம். இந்து ஆண்டு, கிள்ளை கடற்கரை தீர்த்தவாரியை முடித்துக் கொண்டு, வரும் 27ம் தேதி கீழ்புவனகிரி சவுராஷ்டிரா பஜனை மடத்திலும், 28ம் தேதி கீழ் புவனகிரி சீனிவாச பெருமாள் கோவிலிலும் பூவராகசாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
29ம் தேதி புவனகிரி அக்ரஹாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சிக்குப்பின், முத்துப்பல்லக்கில் புவனகிரி கடைவீதிக்கு. எழுந்தருளுகிறார். அன்று கடைவீதி மண்டகப்படியாக வர்த்தக சங்கத்தினர் உபயம் நடக்கிறது.