/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொபட் தீப்பிடித்து எரிந்து சேதம்
/
மொபட் தீப்பிடித்து எரிந்து சேதம்
ADDED : மார் 03, 2026 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம்: ராமநத்தத்தில் சாலையோரம் நின்ற கொண்டிருந்த மொபட் தீப்பிடித்து எரிந்தது.
பெரம்பலுார் மாவட்டம், முருகன்குடியைச் சேர்ந்தவர் மருதமுத்து, 69; இவர் நேற்று காலை 10:45 மணிக்கு, தனது மொபட்டில் ராமநத்தம் கூட்டு ரோட்டிற்கு வந்தார். மொபட்டை சாலையோரம் நிறுத்திவிட்டுகடைக்கு சென்றார். அப்போது, மொபட்டில் இருந்து புகை வெளியேறி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அடுத்த சில நிமிடத்தில் மொபட் முழுதும் எரிந்து சேதமானது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

