ADDED : ஜன 22, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; கல்லுாரி சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த கீழக்குப்பம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் மதிவதனி,17; இவர் கருங்குழியில் உள்ள ஏரிஸ் கல்லுாரியில் பி.சி.ஏ.,முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 20ம் தேதி காலை கல்லுாரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மதிவதினியை தேடி வருகின்றனர்.

