ADDED : செப் 18, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் மேல்பாதியை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் சுஜிதா, 23. இவர் கடந்த 8ம் தேதி, தனது தோழிகளை பார்க்க விருத்தாசலம் செல்வதாக கூறி, வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தாய் உமாராணி அளித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, சுஜிதாவை தேடி வருகின்றனர்.