ADDED : ஜன 17, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : வேலைக்கு செல்லவில்லை என, தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், முதுநகர் அடுத்த காரைக்காட்டை சேர்ந்தவர் செல்வம் மகன் சிவா, 21; பெரம்பலுாரில் தங்கி வெல்டிங் வேலை செய்தார். வேலை பிடிக்காததால் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது தாய் அமுதா, வேலைக்கு செல்லாமல் ஏன் ஊரை சுற்றி வருகிறாய் என சிவாவை கண்டித்தார்.
இதனால், மனமுடைந்த சிவா, சங்கொலிக்குப்பம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இறந்தார்.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

