ADDED : செப் 23, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில் தாய் இறந்த சோகத்தில், மகன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அருகே பூதவராயப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி ராஜாத்தி,65; இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார். இதனால், மனமுடைந்த அவரது மகன் பிரித்திவிராஜ்,27; நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.