ADDED : ஜன 03, 2026 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: தாயை, காணவில்லை என மகள் போலீசில் புகார் செய்துள்ளார்.
பரங்கிப்பேட்டை அடுத்த ஆணையாங்குப்பம் கிராமத்தை சேர்ந் தவர் சுந்தரமூர்த்தி.இவரது, மனைவி ராணி, 54; மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இவர், கடந்த டிச., 30ம் தேதி வீட்டில் இருந்து திருச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
ஆனால், அவர் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் ராணி கிடைக்கவில் லை.
இதுகுறித்து, அவரது மகள் சசிகலா கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.

