/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : மார் 01, 2024 12:01 AM

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் சாலையில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் வழியாக திருச்சி, கடலுார், சென்னை, ஜெயங்கொண்டம், அரியலுார், கள்ளக்குறிச்சி, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன.
இதில், பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் முதல் கிழக்கு வாள்பட்டறை வரையிலான சாலையில் அதிகளவில் மணல் குவிந்துள்ளது. இதனால் இவ்வழியாக பஸ், லாரிகள் செல்லும்போது புழுதி பறப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள் கடும் அவதியடைகின்றனர்.
மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் மணலில் சறுக்கி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது.
எனவே, பெண்ணாடத்தில் சாலையில் குவிந்துள்ள மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

