ADDED : மார் 08, 2024 06:40 AM

புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக் கிள்ளை முனிய னார் கோவிலில் பாலாலயம் நடந்தது.
புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் பிரசித்தி பெற்ற முனியனார் கோவில் உள்ளது.
இக்கோவில் சிதில மடைந்து இடிந்து விழுந்த நிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சார்பில், புதிய கோவில் கட்டுவ தென தீர்மானிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று பாலாலயம் நடந்தது.
கடந்த 6ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், அனுக்ஞை, முதற்கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை கோ பூஜை, இரண்டாம் காலயாக பூஜை நடந்தது.
தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை, 10.00 மணிக்கு கடம் புறப்பாடு செய்து, பாலா லயமும் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் செய்தனர்.

