UPDATED : செப் 02, 2026 08:58 PM
ADDED : செப் 02, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
ராமநத்தம்:பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
சிறுபாக்கம் அடுத்த ஒரங்கூரைச் சேர்ந்தவர் திருசங்கு, 67; ராமநத்தத்தில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். இவருக்கும், தொழுதூரைச் சேர்ந்த வி.சி., கடலூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், 46 என்பவருக்கு நிலம் குறித்து முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி திருசங்கு பெட்ரோல் பங்கிற்கு சென்ற ரமேஷ், ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து புகாரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து ரமேைஷ கைது செய்தனர்.
