ADDED : செப் 15, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
கடலுார்: சிதம்பரம் ஜடா விநாயகர் கோவிலில் சுவாமி முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார்.
சிதம்பரம், குருவையர் தெருவில் ஜடா விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஜடா விநாயகர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
