/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத்
/
விருத்தாசலம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத்
ADDED : டிச 16, 2024 07:16 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், தேசிய லோக் அதாலத் நடந்தது.
முதன்மை சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி தலைமை தாங்கினார். கூடுதல் சார்பு நீதிபதி செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சவுபார்னிகா, இரண்டாவது மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 அரவிந்தன் ஆகியோர் மூன்று அமர்வாக அமர்ந்து வழக்கை விசாரணை செய்தனர்.
இதில், மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்கு, காசோலை மோசடி, வங்கி கடன் வழக்கு என 226 வழக்குகளுக்கு 4 கோடியே 33 லட்சத்து, ஆயிரத்து 23 ரூபாய் தீர்வு காணப்பட்டது.
முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வத்ராமன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

