/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய மல்யுத்த போட்டி: கடலுார் மாணவர்கள் தகுதி
/
தேசிய மல்யுத்த போட்டி: கடலுார் மாணவர்கள் தகுதி
ADDED : நவ 20, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர்கள் 9 பேர், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், கடந்த 17ம் தேதி இந்திய பள்ளிகளின் விளையாட்டுக்குழுமம் சார்பில் மல்யுத்த வீரர்களுக்கான மாநில அளவிலான தெரிவுப்போட்டி நடந்தது.
அதில் கடலுாரைச் சேர்ந்த துகில், மாதவன், ஜெய்அரி, கபிலன், விக்கேஷ், ரூபேஷ், ரோவன்ராஜ் திவிராஜ், சரத் ஆகிய 9 மாணவர்கள் தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் மெய்ஞான மூர்த்தியை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் பாராட்டினார்.

