ADDED : டிச 09, 2024 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : மங்கலம்பேட்டை பாலதண்டாயுத சாமி கோவிலில் நவக்கிரக சன்னதிக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
மங்கலம்பேட்டை பாலதண்டாயுத சாமி கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதி மற்றும் கோவிலுக்கு எதிரில் மன்மனம் சன்னதி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால பூஜையுடன், கடம் புறப்பாடு நடந்தது.
பின்னர் நவக்கிரக சன்னதிக்கும், மன்மதன் சன்னதிக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.