ADDED : ஆக 24, 2025 07:10 AM

கடலுார் : பண்ருட்டியில் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பண்ருட்டியில் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் பிரசாரம் செய்தார். அப்போது, மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, அவரது தலைமையில் '2026 சட்டசபை தேர்தலில் அயராது பாடுபட்டு முழுமையான வெற்றி பெறுவோம்' என மாநில பொருளாளர் சுதீஷ், மாநில இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, கடலுார் மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், மாவட்ட பொருளாளர் ராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத், மாநில இளைஞரணி துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
