ADDED : ஜன 08, 2024 05:45 AM
கடலுார்: கடலுார் துறைமுகம் அருகே வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலுார் அடுத்த சொத்திக்குப்பத்தைச் சேர்ந்தவர் வேலு 45; மீனவர். தைக்கால் தோணித்துறையைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் லோகேஷ், 25; விவேகானந்தன் மகன்கள் கோகுல், 20; கந்தன், 19; கருணைமுருகன் மகன் ராகேஷ் ,22; இவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் தைக்கால்தோணித்துறை பஸ் நிறுத்தம் அருகே மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக சென்ற வேலு, நான்கு பேரையும் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லோகேஷ், கோகுல், கந்தன், ராகேஷ் ஆகியோர் வேலுவை திட்டி தாக்கினர்.
மேலும் இந்த தகராறை விலக்கிவிடச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த உதயன், 47; அரிகரசுதன், 17 ; இருவரும் 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த வேலு, உதயன், அரிகரசுதன் ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வேலு கொடுத்த புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து லோகேஷ், கோகுல், கந்தன், ராகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.