sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவரிடம் நகை பறித்த மூவருக்கு வலை

/

முதியவரிடம் நகை பறித்த மூவருக்கு வலை

முதியவரிடம் நகை பறித்த மூவருக்கு வலை

முதியவரிடம் நகை பறித்த மூவருக்கு வலை


ADDED : அக் 23, 2024 06:16 AM

Google News

ADDED : அக் 23, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே கீழே விழுந்த முதியவரை துாக்குவதுபோல் நடித்து நகையை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கஞ்சனுாரை சேர்ந்தவர் நாகப்பன், 64; இவர் நேற்று முன்தினம் இரவு கடலுார் கூத்தப்பாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பாலத்தில் சென்றபோது நாகப்பன் தடுமாறி விழுந்தார்.

பைக்கில் வந்த 3 நபர்கள், கீழே விழுந்த நாகப்பனை துாக்கி விடுவது போல் உதவி செய்து, நாகப்பன் கையில் போட்டிருந்த ஒன்றரை சவரன் கை செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் நாகப்பன் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us