sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருதுார் வள்ளலார் அவதார இல்லத்திற்கு புதிய கட்டடம்! தமிழக அரசு ரூ.3.75 கோடி நிதி ஒதுக்கீடு

/

மருதுார் வள்ளலார் அவதார இல்லத்திற்கு புதிய கட்டடம்! தமிழக அரசு ரூ.3.75 கோடி நிதி ஒதுக்கீடு

மருதுார் வள்ளலார் அவதார இல்லத்திற்கு புதிய கட்டடம்! தமிழக அரசு ரூ.3.75 கோடி நிதி ஒதுக்கீடு

மருதுார் வள்ளலார் அவதார இல்லத்திற்கு புதிய கட்டடம்! தமிழக அரசு ரூ.3.75 கோடி நிதி ஒதுக்கீடு


ADDED : ஜூலை 01, 2024 06:59 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே வள்ளலார் பிறந்த இல்லத்தை புதியதாக கட்டுவதற்கு, இந்து சமய அறநிலைத்துறையில் ரூ.3 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

''வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் வாடினேன்'', என்ற வள்ளலார் அவதரித்த, கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த மருதுார் கிராமத்தில் அவருடைய நினைவு இல்லம் உள்ளது. இங்கு சன்மார்க்க தொண்டர்கள், பக்தர்களுக்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

இங்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சார்ந்த வள்ளலார் சன்மார்க்க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனர். மேலும், தியானம் செய்து அகவற்பா பாடிவருகின்றனர். தற்போதைய தமிழக கவர்னர் ரவி சமீபத்தில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து தியானம் மேற்கொண்டார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த இல்லம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் விரிசல் விட்டு, மழை காலங்களில் தண்ணீர் ஒழுகியது. மேலும் சில இடங்களில் சுவர்களில் தண்ணீர் கசிவும் ஏற்பட்டது. இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., மருதுார் ராமலிங்கம் மற்றும் அப்பகுதியினர் வள்ளலார் பக்தர்கள் சார்பில் பழுதடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.

வள்ளலாளர் பிறந்த இடத்தில் உள்ள நினைவு இல்ல பாதிப்புகள் குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் முயற்சியால், தொல்லியல்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் தனித்தனியாக ஆய்வு செய்து உறுதித்தன்மை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

அதன் பின் தற்போது தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழுதடைந்த கட்டடத்தை முற்றிலும் இடித்து விட்டு,

தற்போது வடலுாரில் இயங்கிவரும் வள்ளலார் சத்திய ஞானசபையை போன்று, புவனகிரி மருதுாரில் உள்ள வள்ளலார் அவதார இல்லத்தை புதுபிக்க ரூ.3 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வள்ளலார் பக்தர்கள் மற்றும் மருதுார் பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்த பின் கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்க உள்ளது.






      Dinamalar
      Follow us