/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை, பெண்ணாடம் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
/
விருதை, பெண்ணாடம் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
விருதை, பெண்ணாடம் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
விருதை, பெண்ணாடம் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 02, 2026 04:29 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம் உட்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மூலவருக்கு தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணியளவில், உலகநன்மை வேண்டி, சிறப்பு வேள்வி பூஜை செய்து, சுவாமிக்கு 108 சங்கு அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், சந்தனகாப்பு அங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
அதேபோல், நாச்சியார்பேட்டை மாணிக்கவாசகர் ஐய்யனார் கோவில், ஏகநாயகர், வேப்பர், ஆலடி ரோடு வெண்ணுமலையப்பர், கடலுார் ரோடு ஐய்யனார் கோவில், பெரியார் நகர் ராஜகோபாலசுவாமி, சாத்துக்கூடல் சாலை வரதராஜபெருமாள், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர், தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் காலை 6:00 மணியளவில் மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திரவியபொடி ஆகிய பொருட்களால் அபிேஷகம், காலை 7:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மூலவர் சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
இதேபோன்று, பெண்ணா டம் பிரளயகாலேஸ்வரர், மேற்கு ரதவீதி வீற்றிருந்த பெருமாள், இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி, முக்குளம் பிடாரி செல்லியம்மன் ஆகிய கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தன ர்.

