ADDED : டிச 01, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : ' நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவி கோவிலில், அமாவாசையொட்டி, நிகும்பலா யாகம் நடந்தது.
நடுவீரப்பட்டில் பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கராதேவி கோவில் உள்ளது. இங்கு, நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது. அதையொட்டி நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாகவேள்விகள் ஆரம்பிக்கப்பட்டது. 1:45 மணிக்கு மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது.
தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 2:30 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜை ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.

