ADDED : மார் 30, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் பாதாள காளி, பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத அமாவாசையொட்டி நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாகவேள்விகள் துவங்கியது.
2:30 மணிக்கு யாக வேள்வியில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து, மகா பூர்ணாகுதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது.
3:00 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.