ADDED : நவ 10, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: வராஹி அம்மனுக்கு நடந்த நிகும்பலா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. பொதுவாக வராஹி அம்மனை, தேய்பிறை பஞ்சமி நாளில், வழிபாடு சிறப்பு வாய்ந்தது.
இதையொட்டி, நேற்று, கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு யாகம் நடந்தது. அம்மனுக்கு நிகும்பலா யாகமும், தொடர்ந்து, தீபாராதனையும் நடந்தது. வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.

