/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிர்மலா மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்
/
நிர்மலா மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்
ADDED : செப் 21, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : கடலுார் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த 8ம் தேதி கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
இதில் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி யில் 6ம் வகுப்பு பயிலும் மாணவி கனிஷ்காஸ்ரீ என்பவர் 34 எடை பிரிவு போட்டியில் முதலிடம் பிடித்து தங்கபதக்கம் வென்றார். இதன் மூலம் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.
சாதனை படைத்த மாணவியை, பள்ளி தாளாளர் பெலிஷியானா மரியம்மாள், பள்ளி முதல்வர் ஷீலாமார்கிரேட் பாராட்டினர்.