sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி., பாதுகாப்பு படை வீரர்களுக்கு காஷ்மீரில் சிறப்பு ஆயுத பயிற்சி

/

என்.எல்.சி., பாதுகாப்பு படை வீரர்களுக்கு காஷ்மீரில் சிறப்பு ஆயுத பயிற்சி

என்.எல்.சி., பாதுகாப்பு படை வீரர்களுக்கு காஷ்மீரில் சிறப்பு ஆயுத பயிற்சி

என்.எல்.சி., பாதுகாப்பு படை வீரர்களுக்கு காஷ்மீரில் சிறப்பு ஆயுத பயிற்சி


ADDED : ஆக 03, 2025 05:17 AM

Google News

ADDED : ஆக 03, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையாக, என்.எல்.சி., சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கு, காஷ்மீரில், இந்திய ராணுவ அமைப்புகளில் சிறப்பு ஆயுத பயிற்சி அளிக்கப்படுகிறது.

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. பார்லிமென்ட் கட்டடம் மற்றும் அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,) வீரர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டு சதி வேலைகளை எதிர்த்து போராடுவதற்கு ராணுவத்துடன் கூட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் விமான நிலையங்கள், அனல்மின் நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள், அரசு கட்டடங்கள் மற்றும் பார்லிமென்ட் போன்ற இடங்களில் நெருக்கடியான காலக்கட்டத்தில் விரைவாக பதிலடி கொடுக்கவும், எதிரிகளை அழிக்கவும் ராணுவத்துடனான கூட்டு பயிற்சி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சியின்போது, ட்ரோன் ஊடுருவல் போன்ற சிக்கலான, உயர் அழுத்த சூழ்நிலைகளை எப்படி கையாள்வது குறித்து கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நாட்டில் முதல் முறையாக, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இந்திய ராணுவ அமைப்புகளில் ஆயுத பயிற்சி வழங்கி வருகிறது.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த அதிரடி நடவடிக்கை, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தீவிரவாத அமைப்புகளுக்கும் இந்திய ராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக என்.எல்.சி., நிறுவன பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். நெய்வேலி என்.எல்.சி.,யில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் 10 பேர் இந்த பயிற்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us