sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவோர்... அதிகரிப்பு; கடந்த ஆண்டு 85,939 பேருக்கு உதவி

/

108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவோர்... அதிகரிப்பு; கடந்த ஆண்டு 85,939 பேருக்கு உதவி

108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவோர்... அதிகரிப்பு; கடந்த ஆண்டு 85,939 பேருக்கு உதவி

108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவோர்... அதிகரிப்பு; கடந்த ஆண்டு 85,939 பேருக்கு உதவி


ADDED : ஜன 28, 2025 04:57 AM

Google News

ADDED : ஜன 28, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில, கடந்த ஓராண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் விபத்தில் காயமடைந்த17,626 பேர் உட்பட 85,939 பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு அவசர மருத்துவ உதவி சிகிச்சைக்காக தமிழக அரசு, ஜி.வி.கே., நிறுவனம் மூலமாக, 108 ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியது. அதன்படி, கடலுார் மாவட்டம் மழுவதும் 55 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது.

இதில், உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் 11, பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் 2, அடிப்படை வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் 41 மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் சுலபமாக செல்ல பயன்படும் இரு சக்கர வாகனம் 1 என, மொத்தம் 55 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளது.

இந்த ஆம்புலனஸ்கள் மூலம் மாவட்டத்தில் பிரசவம், விபத்தில் காயம், சுவாச கோளாறு உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கடலுார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், இருந்து நோயாளிகளை வெளி மருத்துவமனைகளுக்கு ஏற்றி செல்ல தனியார் ஆம்புலன்சிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நோயாளிகளை மேல்சிகிச்சைகளுக்கு வேறு மருத்துவமனைகளுக்கு ஏற்றிச்செல்ல 108 ஆம்புலன்ஸ் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி, கடந்த 2024 ஆண்டு ஜன., முதல் டிச., மாதம் வரை மாவட்டத்தில் 85,939 பேர், மருத்துவ அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

இதில், பிரசவத்திற்காக 16,016 பேர், சாலை விபத்துகளில் காயமடைந்தோர் 17,626, நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டோர் 4,502, சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டோர் 4,401, காய்ச்சலால் பாதித்தோர் 4,786 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர். முக்கியமாக பச்சிளம் குழந்தைகள் 560 பேர் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023ம் ஆண்டைவிட கூடுதலாக 1,749 பேர் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 834 பேர், வலிப்பு நோய் தொடர்பாக 1,890 பேர், விஷம் குடித்தது தொடர்பாக 5,247 பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நாய் மற்றும் பாம்பு கடித்தது உள்ளிட்ட பல்வேறு அவசர சிகிச்சைகளுக்கு இந்த ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தியுள்ளனர். கடந்த 2023 ம் ஆண்டு 85,093 பேர் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தியுள்ள நிலையில், 2024ம் ஆண்டு 846 பேர் கூடுதலாக பயன்படுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us