sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மக்கள்   முற்றுகையால் பரபரப்பு 

/

 ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மக்கள்   முற்றுகையால் பரபரப்பு 

 ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மக்கள்   முற்றுகையால் பரபரப்பு 

 ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மக்கள்   முற்றுகையால் பரபரப்பு 


ADDED : டிச 12, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: நெடுஞ்சாலைத்தறை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் பாழ்வாய்க்கால் பகுதியை, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்த வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தனிநபர், ஒருவர் தனது வயல்வெளிக்கு செல்ல இடையூறாக உள்ளதால் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இடித்து அகற்ற உத்தரவு பெற்றதாகவும்.

இந்நிலையில், கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்த, சிதம்பரம் நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் காலை 10:00 மணியளவில் போலீசார் பாதுகாப்புடன் ஜே.சி.பி., இயந்திரத்துடன், பாழ்வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர்.

இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சேகர், ஒன்றிய தலைவர் தமிமுன்அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் மணிவாசகம் மற்றும் பாதிப்பிற்குள்ளான மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த டி.எஸ்.பி., விஜிகுமார், சிதம்பரம் தாசில்தார் கீதா, குறுவட்ட வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி ஆகியோர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மக்கள், மாற்று இடம் வழங்கவும், வீடுகளை இடிப்பதற்கு கால அவகாசமும் அளிக்க வலியுத்தினர்.

அங்கு வசிக்கும் மனை பட்டா இல்லாதவர்களுக்கு மாற்று இடத்தினை தேர்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறயைினர் தெரிவித்தனர்.

மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒருவார கால அவகாசம் வழங்கினர். தொடர்ந்து மக்கள் மதியம் 1:30 மணி யளவில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us