ADDED : நவ 02, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத கார் மோதி இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேல் மனைவி ராசாயாள், 80. இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெரியகொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத கார் மோதி ராசாயாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.