நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: ராமநத்தம் அருகே காதுவலி காரணமாக 80வயது மூதாட்டி அரளிவிதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநத்தம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதை மனைவி பாப்பா,80. இவருக்கு 2 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். ஆலத்துார் கிராமத்திலுள்ள பிச்சைப்பிள்ளை என்ற தனது மூத்த மகனின் பராமரிப்பில் இருந்துவந்தார்.
4 ஆண்டுகளாக காதுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த பாப்பா, நேற்று முன்தினம் காலை அரளிவிதை சாப்பிட்டார். அவரை, உறவினர்கள் மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

