நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்,63; கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.