நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி அருகே 65 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார்.
அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இது குறித்து, சின்னகுமட்டி வி.ஏ.ஓ., குமரேசன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து,விசாரித்து வருகின்றனர்.