நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: கோவிலுக்கு சென்ற மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம்,பட்டீஸ்வரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி பச்சையம்மாள்,79;
இவர் கடந்த பிப்., 2 ம் தேதி திருச்செந்துார் கோவிலுக்கு செல்வதாக மருமகள் வசுமதியிடம் கூறிவிட்டு சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் பச்சையம்மாள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து பச்சையம்மாளை தேடி வருகின்றனர்.

