ADDED : மார் 25, 2026 11:01 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த தொரவளூர் புதுகாலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி சின்னபிள்ளை, 70; நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில், சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டவர், அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது மகன் சிவக்குமார் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.
