sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் கார் மோதி விபத்து ஒருவர் பலி: 8 பேர் காயம்

/

கடலுாரில் கார் மோதி விபத்து ஒருவர் பலி: 8 பேர் காயம்

கடலுாரில் கார் மோதி விபத்து ஒருவர் பலி: 8 பேர் காயம்

கடலுாரில் கார் மோதி விபத்து ஒருவர் பலி: 8 பேர் காயம்


ADDED : ஜூன் 16, 2025 12:52 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் முதுநகர் அருகே டெம்போ டிராவலர் மீது கார் மோதி ஒருவர் இறந்தார்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் தாமஸ்,45; இவர் தனது மனைவியுடன் ஸ்ரீமுஷ்ணத்திற்கு வந்தார். நேற்று மாலை மீண்டும் சென்னைக்கு டி.என்.09 சி.கே.6597 பதிவெண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரில் புறப்பட்டார். காரை தாமஸ் ஓட்டினார்.

இரவு 7:40மணிக்கு கடலுார் முதுநகர் அடுத்த அன்னவெளி புறவழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற டெம்போ டிராவலரை முந்தி செல்ல முயன்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், டெம்போ டிராவலரில் மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.

அப்போது எதிரில் கடலுாரில் இருந்து சிதம்பரத்திற்கு ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி, கவிழ்ந்து கிடந்த இரு வாகனங்கள் மீது மோதியது. விபத்தில் தாமஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். அவரது மனைவி மற்றும் டெம்போ டிராவலரில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலுார் முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us