ADDED : அக் 29, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அருகே ரயில் மோதி உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிதம்பரம் அடுத்துள்ள பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில், நேற்று 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் ரயில் மோதி இறந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற காரைக்கால் -சென்னை எக்மோர் கம்பன் விரைவு ரயிலில் அவர் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. அவரது கை கால்கள் துண்டானது.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருணா, உடலை கைப்பற்றி, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து இறந்து கிடந்த அடையாளம் தெரி யாத நபர் குறித்து விசாரிக்கின்றனர்.