ADDED : நவ 17, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அருகே, பைக் மோதியதில் ஒருவர் பலியானார்.
பொன்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் மகன், கண்ணன், 55; இவர் நேற்று முன்தினம் தம்பிபேட்டை பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத பைக் ஒன்று, கண்ணன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

