sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி

/

கடலுாரில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி

கடலுாரில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி

கடலுாரில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி


ADDED : ஏப் 07, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு, வரும் 10ம் தேதி முதல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடு நடக்கிறது.

கடலுார் துறைமுகத்தில் இருந்து இரும்பு தாது உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியும், யூரியா, டி.ஏ.பி., போன்ற பொருட்கள் இறக்குமதியும் நடந்துள்ளன. 2002க்கு பின் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின், சாகர் மாலா திட்டத்தில் இத்துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, ஏற்றுமதி, இறக்குமதிக்கு தயார் நிலையில் உள்ளது. கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், 'கடலுார் துறைமுகம் வழியாக ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்' என, அழைப்பு விடுத்தார்.

அதன்படி, இலங்கைக்கு கட்டுமான பொருட்கள், சிமென்ட், வெங்காயம், துணி வகைகள் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. குறிப்பாக, பாம்பன் பாலம் திறக்கப்பட்டுள்ளதால், வரும், 10ம் தேதி வெங்காயம் ஏற்றுமதி துவக்கப்படலாம் என, தெரிகிறது.

சரக்கு போக்குவரத்து துவக்கப்பட உள்ள நிலையில், கடலுார் துறைமுகத்தில் சிறிய அளவிலான பாய்மரக் கப்பல்கள், மிதவைகள் கையாள்வதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளுடன், கஸ்டம்ஸ், இமிகிரேஷன், சுகாதாரத்துறை ஆகிய பிரிவுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us