/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சவுந்திரசோழபுரத்தில் குடிநீர் தொட்டி திறப்பு விழா
/
சவுந்திரசோழபுரத்தில் குடிநீர் தொட்டி திறப்பு விழா
ADDED : டிச 08, 2024 04:40 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரத்தில் புதிய குடிநீர் தொட்டி திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் பங்கேற்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், மாவட்ட கவுன்சிலர் நிதி 3 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய பொருளாளர் சேகர், ஒப்பந்ததாரர் வெங்கடேசன், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.