ADDED : ஏப் 14, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு,; சேத்தியாத்தோப்பு அடுத்த முகந்தரியங்குப்பம் கிராமத்தில் புவனகிரி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி 22 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தாமோதரன் வரவேற்றார்.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பள்ளி வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.
அ.தி.மு.க., புவனகிரி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், துணை செயலாளர் வீரமூர்த்தி, ஒன்றிய அவைத் தலைவர் செல்வராசு, துணை செயலாளர் பிரித்திவி, முன்னாள் சேர்மன் லட்சுமிநாராயணன், சபரிராஜன், மணிகண்டன், பாண்டியன், ஜெயசீலன் பங்கேற்றனர்.