/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சவுந்திரசோழபுரத்தில் காத்திருப்போர் கூடம் திறப்பு
/
சவுந்திரசோழபுரத்தில் காத்திருப்போர் கூடம் திறப்பு
ADDED : ஜூன் 07, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : சவுந்திரசோழபுரத்தில் காத்திருப்போர் கூடம் திறக்கப்பட்டது.பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், மாவட்ட கவுன்சிலர் நிதி 8 லட்சத்தில் புதிதாக காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி, காத்திருப்போர் கூடத்தை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அப்போது, கிளை செயலர் ஏழுமலை, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., நிர்வாகிகள் அர்ச்சுணன், பெரியசாமி, கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.