/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: விருத்தாசலத்தில் விவசாயிகள் மறியல்
/
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: விருத்தாசலத்தில் விவசாயிகள் மறியல்
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: விருத்தாசலத்தில் விவசாயிகள் மறியல்
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: விருத்தாசலத்தில் விவசாயிகள் மறியல்
ADDED : ஜன 28, 2024 04:26 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் இருந்த நெல் மூட்டைகள் மழை யில் நனைந்ததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருகின்றனர்.
தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. நேற்று காலை விருத்தாசலம் பகுதியில் திடீரென மழை பெய்தது. இதில், கமிட்டி வளாகத்தில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்தன.
இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை மூடுவதற்கு கமிட்டி நிர்வாகத்திடம் தார்பாய் கேட்டபோது, நிர்வாகம் வழங்காததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் காலை 8:00 மணியவளில் விருத்தாசலம் - கடலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தார்பாய் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அனைவரும் 8:20 மணிக்கு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.