ADDED : ஜன 23, 2026 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கொள்முதல் நிலைய எழுத்தர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார்.
முன்னோடி விவசாயிகள் பாபு, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கொ ள்முதல் நிலைய உதவியாளர் விஜய், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பெண்ணாடம், பின்னேரி, திருமலை அகரம் பகுதிகளில் அறுவடை செய்த சம்பா நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.

