/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரநாராயண பெருமாளுக்கு பாண்டுரங்கன் அலங்காரம்
/
சரநாராயண பெருமாளுக்கு பாண்டுரங்கன் அலங்காரம்
ADDED : டிச 01, 2024 07:17 AM

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் பாண்டுரங்கன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், 7:30க்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. மூலவர் சரநாராயண பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்கன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து. திருக்கண்ணாடி அறையில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

