/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரஷ்யாவில் சிக்கிய மருத்துவ மாணவர் மீட்கக் கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்
/
ரஷ்யாவில் சிக்கிய மருத்துவ மாணவர் மீட்கக் கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்
ரஷ்யாவில் சிக்கிய மருத்துவ மாணவர் மீட்கக் கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்
ரஷ்யாவில் சிக்கிய மருத்துவ மாணவர் மீட்கக் கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2025 08:04 AM

கடலுார் : ரஷ்யாவில் சிக்கிய மாணவரை மீட்கக் கோரி கடலுார் கலெக்டர் அலுவலகம் முன், பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று காலை ரஷ் யாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்கக் கோரி கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது .
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பினர். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், சரவணன் அளித்த மனு:
தனது மகன் கிஷோர் ரஷ்யாவில் உள்ள வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக கூரியர் நிறுவனத்தில் பகுதி நேரமாக டெலிவரி பாய் வேலை செய்தார்.
கடந்த 2023 மே மாதத்தில் தடை செய்த பொருட்களை டெலிவரி செய்ததாக கிஷோர், அவருடன் தங்கியிருந்த தமிழக மாணவர் நித்திஷ் மற்றும் மூன்று ரஷ்ய மாணவர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தனது மகனுக்கு ஜாமின் பெற முயற்சித்து வருகிறோம்.
இந்நிலையில் எனது மகனை மிரட்டி சில ஆவணங்களில் கையெழுத்து பெற்று, உக்ரைனுக்கு எதிராக போருக்கு அனுப்ப பயிற்சி அளிப்பதாக கூறி கிேஷார் ஆடியோ அனுப்பியுள்ளார்.
தமிழக அரசும், மத்திய அரசும் எனது மகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.