நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது.
மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு வெள்ளூர் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க கோரி, சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக நேற்று விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சையத் மெஹமூத் தலைமை தாங்கினார். தாசில்தார் உதயகுமார், மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் இளவழகி மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் குணசேகரன், அய்யம்பதி ராஜா நசீர், மற்றும் கிராம மக்கள், பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

